விடியப்போகும் வருடமே!
நிஜங்களின் பிரதி பலிப்பின் மேல் நம்பிக்கைவைக்காமல்
கற்பனைகளின் கண்துடைப்புகள் மேல் நப்பாசை வைத்தவர்க்கு
விடியப்போகும் வருடமே என்ன சொல்லப் போகிறாய்?
_____________________________________________________________
என் வாழ்வின் எல்லைவரை
எதைக் கொண்டு போக நினைக்கிறேனோ – அது
என் கைக் கெட்டாத கனியாகி விடுமோ என்றுதான்
கண்கள் கண்ணீர் செய்ய முயற்சிக்கின்றன
ஆனாலும்………………..
ஒரு நேரம் வந்தால்…
என் குருட்டு விம்பங்களிலும்
ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தால்…
எனக்கான வசந்த சோலை
என் முன்னேயே வந்து நின்றால்…
நிழலாடிக் கொண்டிருக்கும்
நிகழ்ச்சிச் சித்திரங்கள் என்
வாழ்க்கைத்திரையில் அரங்கேறிவிட்டால்….
இவை எல்லாமே……..?
இல்லையென்று ஆகிவிடக்கூடும் என்று தெரிந்தும் கூட
அந்த கற்பனை நாளை எண்ணி
வாழ்வை கடந்துவேன்!!